நத்தம் அருகே 12 அடி நீள மலை பாம்பு பிடிபட்டது

2 months ago 10

நத்தம், நவ.5: நத்தம் அருகே மஞ்ச நாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பூசாரிபட்டியை சேர்ந்த பாலு என்பவர் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று தனது ஆட்டுக்குட்டியை கடித்துக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்பு வீரர்கள், புதருக்குள் மறைந்திருந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

The post நத்தம் அருகே 12 அடி நீள மலை பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Read Entire Article