நதிகளை இணைக்காமல் தேசத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று மகராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நேற்று முன்தினம் மாலை தியாகராஜ சுவாமிகளின் 178-வது ஆராதனை விழா தொடக்க விழா நடைபெற்றது. தியாகப் பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கிவைத்தனர்.