“நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல நடத்துவது சரியல்ல” - தமிழிசை காட்டம்

3 months ago 17

சென்னை: நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல தமிழக காவல் துறை நடத்துவது சரியல்ல என்றும், அது பாரபட்சமான நடவடிக்கை என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு ரூ.178 கோடி மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

Read Entire Article