நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட் கிளையில் மனு..!!

2 months ago 9

சென்னை: தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் நடந்த போராட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு பேசினார். நடிகை கஸ்தூரி மீது சென்னை, மதுரை காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு சென்றபோது கஸ்தூரி தலைமறைவு ஆனார். வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவான நிலையில் கஸ்தூரியை போலீசார் தேடி வருகின்றனர். போலீஸ் நடவடிக்கை தீவிரம் அடைந்ததை அடுத்து நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

The post நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட் கிளையில் மனு..!! appeared first on Dinakaran.

Read Entire Article