நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைப்பு: எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

2 months ago 11

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவர் ‘அரசியல் அராஜகம் ஒழியட்டும்’ என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் எழும்பூர் போலீஸாரும், மதுரை போலீஸாரும் தனித்தனியாக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் அவர் தங்கி இருக்கும் தகவல் சென்னை தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று நடிகை கஸ்தூரியை சனிக்கிழமை கைது செய்தனர்.

Read Entire Article