நகைக்கடன் புதுப்பிப்பு: ஆர்பிஐயின் புதிய வழிகாட்டு முறையை திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்

2 months ago 13

புதுடெல்லி: நிதியமைச்சர் நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய வழிகாட்டு முறையை திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகள் பழைய நடைமுறைகள் தொடர உறுதி செய்யுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நேரமில்லா நேரத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று ஆற்றிய உரை வருமாறு: மக்கள் தங்கள் அவசர பணத் தேவைகளுக்காக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து நகைக் கடன்களைப் பெறுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. ஏழை மக்கள், விவசாயிகள், சிறு தொழில் பிரிவுகளில் உள்ள சிறு வணிகர்கள் தங்கள் உடனடித் தேவைகளுக்கு நகைக் கடன்களை பெரிதும் நம்பியுள்ளனர்.

Read Entire Article