
சென்னை,
நகைக் கடன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.இந்த நிலையில், இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது,
தங்க நகைக்கடன் மீதான புதிய விதிமுறைகள் ஏழை மக்களுக்கு எதிரானவை. இந்த விதிகளை நிறுத்தி வைக்க மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியின் விளைவாக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. என தெரிவித்துள்ளார் .