நகை கடன்பெற வங்கிகளின் புதிய நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்

4 days ago 8

திருவாரூர் ஜூன் 5: பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்களை கண்டித்து திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மிழகத்தில் கடந்த 4 ஆண்டு காலமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையினை வழங்காத பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்களை கண்டித்தும், தூர்வாரும்பணிகளை மாவட்ட முழுவதும் எவ்வித முறைகேடும் இல்லாமல் முறையாக ஏ,பி,சி மற்றும் டி சேனல் பாசன வாய்க்கால்களை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக தூர்வார வேண்டும், நீர்நிலை கட்டுமான பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும், வங்கிகளில் நகை கடன் பெற விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை ரத்து செய்திட வேண்டும், கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சை பயிறு, எள் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் மாவட்ட தலைவர் தம்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் கலியபெருமாள், மாநில குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி மற்றும் பொறுப்பாளர்கள் சாமிநாதன், சுப்பிரமணியன், பவுன்ராஜ், ஜெயபிரகாஷ். முத்துச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நகை கடன்பெற வங்கிகளின் புதிய நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article