நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் பணிக்கு வராத டாக்டர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவர்: அமைச்சர் உத்தரவு

6 months ago 18

கோவை: தமிழகத்தில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் பணிக்கு வராத டாக்டர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.13 கோடி மதிப்பில் 2-வது எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கோவை அரசு மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியின் கீழ் ரூ.13 கோடியில் 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் 2-வது கருவி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கருவியில் ஒரு ஸ்கேன் பரிசோதனைக்கு 20 நிமிடத்திற்குள்ளாகவே ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து கொள்ளமுடியும். இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் ஸ்கேன் பரிசோதனை செய்ய முடியும் என்பதால் காத்திருப்பு காலம் குறையும்.

Read Entire Article