நகரில் வேளாண் பல்கலைக்கழக விடுதி மாணவர்களை பத்திரமாக அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்: n ஒன்றிய அரசுக்கு வைகோ கோரிக்கை

14 hours ago 2

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தீவிரவாதிகளின் துப்பாக்கி சூடு நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்து தொடர்ந்து நடந்துவரும் சூழலில், நகர் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பற்ற சூழ்நிலையைஉங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். மற்ற மாநிலங்களை சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்களை அந்தந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வருமாறு எனக்கு தனிப்பட்ட அழைப்புகள், மின்னஞ்சல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. போர் நடைபெறும் மண்டலத்திலிருந்து மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு உதவ தமிழக அரசும் தயாராக உள்ளது. எனவே, நகரில் உள்ள மாணவர் விடுதிகளில் இருந்து மாணவர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்புடன் விரைவில் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

The post நகரில் வேளாண் பல்கலைக்கழக விடுதி மாணவர்களை பத்திரமாக அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்: n ஒன்றிய அரசுக்கு வைகோ கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article