தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

8 months ago 26

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்வதால், மலைபாம்புகள் சில மழைநீரில் அடித்து செல்லப்படுகிறது. அதிலும், கனமழை காரணமாக ஆழியாற்றங்கரையோரம் உள்ள சில தோப்புகளில் மலைபாம்பு புகுந்து விடுகிறது.இதில் நேற்று, ஆழியாற்றங்கரையோரம் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், சுமார் 11 அடி நீரமுள்ள மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்தவர்கள் உடன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், அந்த மலைபாம்பை சுமார் 2 மணிநேரம் போராடி பிடித்தனர். பின் அதனை சாக்கு பையில் போட்டு அடர்ந்த வனத்தில் விடுத்தனர்.

The post தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article