தொழில் பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை

3 weeks ago 7

 

மதுரை, ஜன. 12: மதுரை மாவட்டத்தில் வசிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தொழில் பழகுநர் பயிற்சி முகாம் நடக்கிறது. ஜன.20ம் தேதி காலை 9 மணி முதல் மதுரை, மூன்றுமாவடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் இதற்கான சேர்க்கை நடக்கிறது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களது கல்வி சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். தொழிற்பழகுநராக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.7700 முதல் ரூ.12 ஆயிரம் வரை வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் வழங்கப்படும்.

The post தொழில் பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை appeared first on Dinakaran.

Read Entire Article