ஓசூர்: ஒசூரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத மாநகராட்சியின் அசையா சொத்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த விவேகானந்தன் (55). இவர் தனியார் தொழிற்சாலையில் பணி செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 1996-ம் ஆண்டு ஓசூர் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமன திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறிவிழுந்தார். மேலும், கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியான விஷ வாய்வு தாக்கி உயிரிழந்தார்.