தொழிலாளி மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல்: ஓட்டல் உரிமையாளர் கைது

7 months ago 34

 

கோவை, அக். 1: கோவை குனியமுத்தூர் வேடப்பன் வீதியை சேர்ந்தவர் நாகராஜன் (51). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு குடிபோதையில் மற்றொருவருடன் தகராறு செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஓட்டல் உரிமையாளர் தாஸ் என்பவர் நாகராஜனை கண்டித்தார். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தாஸ் ஓட்டலில் இருந்த மிளகாய் பொடியை நாகராஜன் மீது தூவி அவரை தாக்கினார்.

மேலும் கத்திரிக்கோலால் தாக்கி உள்ளார். இதில் நாகராஜனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை தாக்கிய குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் தாஸ் (54) என்பவரை கைது செய்தனர்.

The post தொழிலாளி மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல்: ஓட்டல் உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article