சென்னை: உங்களுக்கெல்லாம் மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்த தாய் கலைஞர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். கலைஞரின் உள்ளத்திலே எப்போதும் இருப்பவர்கள் மாற்றுத் திறனாளிகள். இன்று எனக்கு உணர்ச்சிப்பூர்வமான நாள். மாற்றுத்திறனாளிகளுக்கான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தீருவேன். மாற்றுத்திறனாளிகளுக்காக ஏராளமான திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது. 13,357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினராக நியமிக்கப்படுவார்கள். மாவட்ட வாரியாக ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.
The post உங்களுக்கெல்லாம் மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்த தாய் கலைஞர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.