தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் தாளடி சாகுபடி பணிகள் தீவிரம்

2 months ago 16

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், தாளடி பருவத்துக்கான சாகுபடிப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, குறுவை சாகுபடிப் பணிகள் மே, ஜூன் மாதங்களில் தொடங்கி, அக்டோபர், நவம்பர் மாதங்களிலும், சம்பா சாகுபடிப் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்களிலும், தாளடி சாகுபடி நவம்பரில் தொடங்கி பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் அறுவடை நடைபெறும். குறுவை அறுவடை முடிந்தவுடன், தாளபடி சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

Read Entire Article