தொடர் பட்டாசு விபத்துகள் ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை கறாராக கடைபிடிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

3 months ago 10

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் கறாராக கடைபிடித்தால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதை தடுக்க முடியும்.

எனவே, இனிவரும் காலங்களில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்தை தடுப்பதற்கு அரசின் விதிமுறைகளை கறாராக கடைப்பிடிக்கப்படுவது, பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் இருப்பது உள்ளிட்டவற்றை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஆலை நிர்வாகம் ரூ.10 லட்சமும், அரசு நிர்வாகம் ரூ.20 லட்சமும் நிவாரணமும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தொடர் பட்டாசு விபத்துகள் ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை கறாராக கடைபிடிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article