விழுப்புரம்: ‘தைலாபுரத்தில் நடைபெறுகிற கூட்டங்களுக்கு வருகை தராத நிர்வாகிகளுக்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பாமக மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது.
நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் முரளிசங்கர், அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் தீரன், மாநிலச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.