சென்னை: பொது விடுமுறை என அறிவிக்கப்பட்ட தைப்பூச நாளில் பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறக்கக் கூடாது என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானை சிறப்பித்துக் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இந்நிலையில், இந்துக்களுக்கு, குறிப்பாக முருக பக்தர்களுக்கு தொடர்ந்து விரோதமாக செயல்படும் திமுக அரசு, பொது விடுமுறை என அறிவிக்கப்பட்ட தைப்பூச தினமான பிப். 11-ம் தேதி பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்துள்ளது.