தேவர் ஜெயந்திக்காக வரும் வாகனங்கள்: விருதுநகரில் போலீஸார் தீவிர சோதனை

6 months ago 20

விருதுநகர்: விருதுநகர் மற்றும் திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் இருந்து தேவர் குருபூஜைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் விருதுநகரில் இன்று (அக்.30) தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் ஏராளமானோர் செல்கின்றனர். அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு குருபூஜைக்குச் செல்லும் வாகனங்களுக்கு என தனியாக அனுமதி பாஸ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டுமே குருபூஜைக்கு செல்ல வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Read Entire Article