தேவசகாயம் மவுண்டில் வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

2 months ago 10

 

ஆரல்வாய்மொழி, நவ.8: ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் இளைஞர் வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை மற்றும் மறைசாட்சி புனித தேவசகாயம் இரட்டை திருத்தலத்தில் இளைஞர் வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது.இம்முகாமில் 53 இளைஞர்கள் கலந்து கொண்டு பலன் பெற்றார்கள். முகாமிற்கு காவல்துறை அதிகாரி பெர்னார்டு சேவியர் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார்.

தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை அருட்பணியாளர் ராஜன் வாழ்த்துரை வழங்கினார். இரட்டை திருத்தலத்தின் பங்குத்தந்தை லியோன் கென்சன், இணை பங்குதந்தை சலீன் ஜாண், திருத்தொண்டர் யேசு பிரவின், பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் சிலுவை தாசன், செயலாளர் டேவிட், பொருளர் ஜெனட் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

The post தேவசகாயம் மவுண்டில் வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article