தேர்வர்களின் நலன் கருதி நேர்முகத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: டிஎன்பிஎஸ்சி-க்கு ராமதாஸ் கோரிக்கை

5 months ago 30

சென்னை: ஓரே நாளில் இரு அரசுப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வர்களின் நலன் கருதி நேர்முகத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சிவில் பொறியியல் பாடத்திற்கான தேர்வும், உள்ளாட்சி பொறியியல் சார்ந்த பணிக்கான தேர்வும் அக்.21ல் நடைபெறுகிறது. 2 தேர்வுகளும் ஒரே கல்வி தகுதியைக் கொண்டவை என்பதால் ஒரு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனவும், குழப்பங்களை தவிர்க்க இனி டிஎன்பிஎஸ்சி மூலமே ஆள்தேர்வு நடத்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

The post தேர்வர்களின் நலன் கருதி நேர்முகத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: டிஎன்பிஎஸ்சி-க்கு ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article