தேர்​தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள்: மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல்

1 day ago 3

சென்னை: ‘சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போட்டியிட விரும்பும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள்’ என மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி உறுதியாகவும், ஒருங்கிணைந்தும் செயல்பட்டு வருகிறது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பல கட்சிகளுடன் தொடர்ந்து மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Read Entire Article