‘தேமுதிக கட்சிப் பதவியில் இருந்து என்னை விடுவிப்பீர்!’ - பிரேமலதாவுக்கு நல்லதம்பி கடிதம்

12 hours ago 2

சென்னை: கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட புதிய பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கடிதத்தில், ‘நான் விஜயகாந்த்தால் உருவாக்கப்பட்டவன். அவரின் குடும்பத்துக்கும், கட்சிக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன். சமீபத்தில் நடந்த பொதுக் குழுவில் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக தேர்வானதற்கு எனது வாழ்த்துக்கள். அவரின் குரல் சட்டப்பேரவையில் விஜயகாந்த்தின் குரலாக ஒலிக்க வேண்டும். அதேநேரம், பொதுக்குழுவில் எனக்கு தரப்பட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படி விடுவிக்காதபட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Entire Article