தேனி: சபரிமலைக்கு சென்ற பேருந்து மற்றும் தரிசனம் முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த வேன் தேனி அருகே நேருக்கு நேராக மோதியது. இதில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 14-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று இரவு சபரிமலைக்கு தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அதே போல ஓசூரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன் சபரிமலையில் தரிசனம் முடித்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.