தேசிய பால் தின விழா | வர்கீஸ் குரியனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க பால் முகவர்கள் நலச்சங்கம் கோரிக்கை

7 months ago 29

சென்னை: தேசிய பால் தினத்தையொட்டி டாக்டர் வர்கீஸ் குரியனுக்கு பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய பால் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நேற்றைய தினம் (26.11.2024) மாலை 3.00மணியளவில் சென்னை, வியாசர்பாடி, பக்தவத்சலம் காலனியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசாமி ஆன்மீக டிரஸ்ட் திருமண மண்டபத்தில் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில், பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், பொருளாளர் எஸ்.முருகன் ஆகியோரது முன்னிலையில் தேசிய பால் தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Read Entire Article