காஞ்சிபுரம், ஜூன் 26: இந்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் டென்சிங் நார்கே சாகச விருது 2024-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்திய அரசின் சார்பாக, தேசிய அளவில் வீர, தீர மிக்க செயல் புரிந்தவர்களுக்கு டென்சிங் நார்கே தேசிய சாகச விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. துணிச்சலான நடவடிக்கைகள் நிலம், நீர் மற்றும் வான்வெளி மண்டலத்தில் சாகசம் செய்தமைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதானது 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் சாகசம் புரிந்ததாக இருக்க வேண்டும்.
தற்போது, 2024ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்குவதற்கு இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்கான விண்ணப்பத்தினை இணையதள முகவரி https://awards.gov.in/-யில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2025 மாலை 5 மணி ஆகும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ (அல்லது) தொலைபேசி எண் 74017 03481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
The post தேசிய சாகச விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.