தேசிய சராசரி வளர்ச்சியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

6 hours ago 2

திருப்பத்தூர் : ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்தாலும் தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க முடியவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “தோல் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி மூலமாக வருவாயும் ஈட்டி வேலை வாய்ப்பும் அளிக்கிறது திருப்பத்தூர் மாவட்டம். தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதிக திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மக்கள் அன்பை வாரி வழங்கி வருகின்றனர். 2026 மட்டுமல்ல 31 ஆக இருந்தாலும் 36 ஆக இருந்தாலும் என்றைக்கும் நாம்தான் நாட்டை ஆளப்போகிறோம். தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறையில்லாத கடந்தகால ஆட்சியாளர்களால் சீரழித்த வளர்ச்சியை திமுக அரசு சீர்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஓர வஞ்சனை செய்கிறது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்தாலும் தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. சமூக முன்னேற்ற குறியீடுகளிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.21%ஆக உள்ளது. பணவீக்கம் குறைந்த மாநிலம் தமிழ்நாடு. நாட்டின் அதிக நகரமயமாக்கல் நகரமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. தேசிய சராசரி வளர்ச்சியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் பல ஆண்டுகளாக அதிகமாக உள்ளது.”இவ்வாறு பேசினார்.

The post தேசிய சராசரி வளர்ச்சியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article