“தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வற்புறுத்தி நிதியைத் தராமல் இருப்பது ஏற்புடையதல்ல” - அமைச்சர் அன்பில் மகேஸ்

6 months ago 31

கோவை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் எனக் கூறி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புப் பொது தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ‘தமிழக அரசு கல்வித் துறைக்காக ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேராததால் மத்திய அரசு உடனடியாக நிதி வழங்காவிட்டாலும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் இருந்து ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்.

Read Entire Article