''தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது'': அமைச்சர் ஐ.பெரியசாமி

4 hours ago 2

திண்டுக்கல்: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைகளை கண்டறிவதிலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதிலும் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுவதால், தேசிய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் அறிவிக்கையின்படி தமிழ்நாடு அரசு ஒரு தற்சார்பற்ற சமூக தணிக்கை சங்கத்தினை தோற்றுவித்து 2012-13 ஆம் ஆண்டு முதல் சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

Read Entire Article