தேங்காப்பட்டணத்தில் விவசாயி மீது மது பாட்டிலால் தாக்குதல்

2 weeks ago 3

புதுக்கடை, ஜன.18: தேங்காப்பட்டணத்தில் விவசாயியை மதுபாட்டிலால் தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேங்காப்பட்டணம் அருகே தோப்பு என்ற இடத்தை சேர்ந்தவர் செய்யது அலி ஷாஜகான் (53). விவசாயி. சம்பவத்தன்று இவர் தேங்காப்பட்டணம் சந்திப்பு பகுதியில் நிற்கும் போது அங்கு வந்த தேங்காப்பட்டணம் ஆஸ்பத்திரி சந்திப்பு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (43) என்பவர் அவதூறாக பேசியுள்ளார். அவரை செய்யது அலி ஷாஜகான் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த இஸ்மாயில் மதுபான பாட்டிலால் ஷாஜகானை தாக்கியுள்ளார். இதில் நெற்றியில் ரத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த செய்யது அலி ஷாஜகான் தேங்காப்பட்டணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தேங்காப்பட்டணத்தில் விவசாயி மீது மது பாட்டிலால் தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article