சென்னை: காலனி என்ற சொல் நீக்கப்படுவது போல், ஜாதி பெயரில் இருக்கும் தெருக்களின் பெயரையும் நீக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். தங்கள் கூட்டணி மிக பலமாக உள்ளது; கொள்கை ரீதியாக மிக பலமானதாக இருக்கின்றது என்பதுதான் முக்கியமானது. இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டு மக்கள் மீது ஒன்றிய அரசு போர் தொடுத்திருக்கிறது. பாஜகவுடன் கூட்டணியால் அதிமுகவும் தமிழர்கள் மீது போர் தொடுக்கிறது என்றுதான் அர்த்தம் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
The post தெருக்களின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்குக: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.