தென்காசி மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

2 months ago 8

தென்காசி, நவ.28: தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (29ம் தேதி) காலை 11 மணிக்கு கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் நடக்கிறது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் குறிப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். விவசாய குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விபரங்களும் அனைத்து வகை கைபேசிகளிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இக்குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post தென்காசி மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article