தென்காசி மாவட்டத்தில் இடைவிடாத மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

3 months ago 13

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இடைவிடாத மழை பெய்துவருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில், வடகிழக்கு பருவமழையும் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய மழை பெய்த நிலையில், பகலிலும் மழை நீடித்தது.

ஒரு சில இடங்களில் அவ்வப்போது பலத்த மழையும் மற்ற பகுதிகளில் தொடர்ந்து மழை தூறிக்கொண்டும் இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். தொடர் மழையால் கட்டுமான பணிகள், செங்கல் சூளை தொழில்கள் பாதிக்கப்பட்டது.

Read Entire Article