மதுரை: “தென் மாவட்டங்களுக்கான ரயில்வே திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றவில்லை” என, மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றம்சாட்டினார்.
மதுரை அவனியாபுரம் பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்தனர். இதைத்தொடர்ந்து திருநகரிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அகமதாபாத்தில் காங்கிரஸ் மாநாடு வெற்றிகரமாக முடிந்தது. அதில் நியாயப்பாதை என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.