தென் ஆப்பிரிக்க வீரர்கள் எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார்களா..? பயிற்சியாளர் பதில்

2 days ago 2

கேப்டவுன்,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்த போர்ப்பதற்றம் முடிவுக்கு வந்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் மீண்டும் தொடங்க உள்ளது. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

இந்தியாவில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும்போது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ந்தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 11-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது.

இதனால் இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்ற 15 வீரர்களில் 8 பேர் ஐ.பி.எல். போட்டியிலும் ஆடுகிறார்கள். அவர்கள் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார்களா? என்பது குறித்து அந்நாட்டின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ட்ராட் சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஐ.பி.எல். நிர்வாகத்துடன் செய்து கொண்ட முதற்கட்ட ஒப்பந்தப்படி மே 25-ந்தேதி ஐ.பி.எல். இறுதி ஆட்டம் நடைபெறும். 26-ந்தேதி எங்களது வீரர்கள் தாயகம் கிளம்புவார்கள். இங்கிருந்து 30-ந்தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும். இதுதான் எங்களது நிலைப்பாடு. இதில் மாற்றம் செய்யப் போவதில்லை. எங்களது வீரர்கள் 26-ந்தேதி தாயகம் திரும்ப வேண்டும். அது சரியாக நடக்கும் என்று நம்புகிறேன்" என கூறினார்.

Read Entire Article