தூய்மைப் பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்பு.!

2 months ago 14
நகராட்சி தூய்மைப் பணியாளரின் மகள் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சேகர்-செல்வி தம்பதியரின் மகளான துர்கா தேர்வில் தேர்ச்சி பெற்று விருப்ப தேர்வு அடிப்படையில் நகராட்சி ஆணையர் பதவியை தேர்ந்தெடுத்துள்ளார்.  உயிரிழந்த தனது தந்தை சந்தித்த அவமானங்களே தன்னை இந்த பதவியை தேர்வு செய்ய வைத்ததாக தெரிவித்த துர்கா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Read Entire Article