தூத்துக்குடியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

2 months ago 10

தூத்துக்குடி, நவ.17:தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் மகன் மொய்தீன் (36). இவரை திருட்டு வழக்கு தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். தற்போது சிறையில் உள்ள அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தென்பாகம் போலீசார், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கலெக்டர் இளம் பகவத்துக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கலெக்டர், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் மொய்தீனை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்காக உத்தரவை சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

The post தூத்துக்குடியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article