
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. உத்தரவின்படி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் இன்று (25.6.2025) கோவில்பட்டி பல்லாக்குரோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் பைக்கில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக கொண்டு வந்த வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கையா மகன் மாரிமுத்து (வயது 66) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 24 கிலோ 750 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று ஏரல் காவல் நிலைய போலீசார் இன்று ஏரல் பஜார் பகுதியில் ஒரு டீக்கடையில் வைத்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ஏரல் முஸ்லிம் வடக்கு தெருவை சேர்ந்த ஜான்(எ) முகமதுகான் மகன்களான இஸ்மாயில்கான்(38) மற்றும் கரீம்கான்(35) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 15 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மேற்சொன்ன 2 காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.