தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையை ரூ.22.40 கோடியில் சீரமைக்க விரைவில் பணிகள்! 

3 hours ago 3

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களை பரிதவிக்க வைக்கும் வகையில் காணப்படும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலைக்கு விடிவு கிடைத்துள்ளது. ரூ.22.40 கோடியில் 17 கி.மீ. தொலைவுக்கு சாலையை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்செந்தூர் சாலை: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையேயான சாலையும் ஒன்றாகும். சுமார் 40 கி.மீ தூரம் கொண்ட இச்சாலை, கடந்த 2021-ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றனர். வட மாவட்டங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வாகனங்களில் பக்தர்கள் இந்த சாலை வழியாக தான் வந்து செல்கின்றனர்.

Read Entire Article