*தினமும் காலையில் பத்து துளசி இலையை மென்று தின்பதால் ரத்தம் சுத்தமடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்றுவலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.
*துளசிக் கசாயம் வாய் துர்நாற்றத்தினையும், பால்வினை நோய்களையும் நீக்கும்.
*துளசியை தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
*வீடுகளில் துளசிச்செடியை வளர்ப்பதால் தூய்மையான காற்றைப் பெறலாம்.
*தொழுநோயை குணமாக்க மருந்துகளில் அதிகளவில் துளசி சேர்க்கப்படுகிறது.
*உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது. துளசிச்சாறு சளித்தொல்லை, ஆஸ்துமா ஆகிய நோய்களைக் குணப்படுத்தும்.
*துளசிச் செடியின் வாடையின் காரணமாக கொசுக்கள் வருவதில்லை. இதனால் மலேரியா நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.
மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் துளசியினை மென்று உட்கொண்டு வந்தால், மலேரியா நோய் நீங்கும்.
*துளசிச்செடி அதிகளவில் வளரும் இடங்களில், காற்றில் இருக்கும் புகை, கிருமிகள் போன்ற மாசுக்கள் அழிந்து, காற்று மண்டலம் தூய்மை அடையும்.
*துளசி ஜீரண சக்தியை மேம்படுத்தும். கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவி புரிகிறது.
*துளசி இடப்பட்ட நீரில் நீராடினால், புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
*துளசிக் குச்சியால் ஹோமம் செய்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
The post துளசியின் மருத்துவ குணங்கள் appeared first on Dinakaran.