“துரைமுருகன் பேசியது இந்தியப் பெண்களின் கண்ணியம் மீதான தாக்குதல்” - மன்னிப்புக் கோர வானதி வலியுறுத்தல்

4 hours ago 4

சென்னை: திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் பெண்களைக் குறித்து இழிவாக பேசுவது அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, “திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன், பெண்களைக் குறித்து இழிவாக பேசுவது அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது. அவர், பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில், மோசமான, இழிவான கருத்தை தெரிவித்துள்ளார். “ஐந்து ஆண்கள் ஒரு பெண்ணை மணப்பார்கள்" என்ற அவரது அருவருப்பான பேச்சு நமது இந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், பெண்கள் மீதான திமுகவின் அவமதிப்பையும் அம்பலப்படுத்துகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் இந்த மோசமான கருத்தை நியாயப்படுத்துவார்களா?

Read Entire Article