துணை ராணுவப் படையினருக்கும் ராணுவத்தினருக்கு இணையான சலுகைகளை வழங்க எழும் கோரிக்கை!

2 hours ago 3

சென்னை: நாட்டின் எல்லைப் பகுதியில் போரிடும் துணை ராணுவப் படையினருக்கு, ராணுவத்தினருக்கு இணையான சலுகைகளை வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை முன்னாள் மத்திய ஆயுத காவல்படை மறுவாழ்வு சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நல மற்றும் மறுவாழ்வுச் சங்க முதன்மைச் செயலாளர் எஸ்.மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீர், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தது. அத்துடன், மத்திய அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கை மூலம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை தாக்கி அழித்தது.

Read Entire Article