“துணை முதல்வரான பின் உதயநிதி தனது பணியை மறந்துவிட்டார்” - ஹெச்.ராஜா விமர்சனம்

5 months ago 31

திருச்சி: “தனது நண்பர்கள் நலனுக்காக விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது கார் பந்தயம் நடப்பதற்கு முன்னேற்பாடுகளை தொடர்ந்து கவனித்த உதயநிதி, துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் தனது பணியை மறந்துவிட்டார்” என ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா தலைமை வகித்தார். விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் கவுதம் நாகராஜன், மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்குப் பின்னர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: “ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய உள்ளது. இந்த வெற்றியைத் தந்த ஹரியானா மக்களுக்கு நன்றி.

Read Entire Article