‘தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்கிடுக’ - தமிழக முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

4 months ago 28

சென்னை: தீபாவளி பண்டிகையைக் கொண்டாட அதற்கான செலவுகளை மேற்கொள்ள உதவியாக நடப்பு அக்டோபர் மாத சம்பளத்தை, தீபாவளிக்கு முன்பாகவே வழங்க ஆவன செய்யுமாறு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், "இந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி கொண்டாட அதற்கான செலவுகளை மேற்கொள்ள உதவியாக நடப்பு அக்டோபர் மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க ஆவன செய்ய வேண்டுகிறோம். துணிமணி, பட்டாசு, பலகாரங்கள் வாங்க முன்கூட்டியே சம்பளம் வழங்கினால் அது எங்கள் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

Read Entire Article