தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் வருகிற 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் வியாழக்கிழமை என்பதால், அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை நாளாகும். இந்த விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 9ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாள் அறிவிப்பு! appeared first on Dinakaran.