“தீபாவளிக்கு இம்முறை அதிகம் பேர் பேருந்துப் பயணத்துக்கு முன்பதிவு” - அமைச்சர் சிவசங்கர்

4 months ago 17

அரியலூர்: தீபாவளி பயணங்களை பொறுத்தவரை முந்தைய தீபாவளியைக் காட்டிலும் இம்முறை அதிகம் பேர் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி கிராமத்திலிருந்து கடலூர் மண்டலத்தின் சார்பில் சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்தை இயக்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி முன்னிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கொடியசைத்து புதிய வழித்தடப் பேருந்தை தொடங்கி வைத்தார்.

Read Entire Article