தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள்

7 months ago 23

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை தெரிவித்தனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் 4 நாட்கள் விடுமுறைக்குப்பின் மாணவர்கள் நேற்று மீண்டும் பள்ளிக்கு வந்தனர். வண்ண உடைகளில் பள்ளிக்கு வந்த மாணவர்கள், ஒருவருக்கொருவர் பண்டிகை கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தனர். தனியார் பள்ளிகளில் இதுபோன்ற செயல்பாடுகள் இருந்து வந்த நிலையில், தற்போது அரசு பள்ளிகளிலும் தீபாவளி நிறைவடைந்து ஒருநாள் புத்தாடை உடுத்திகொள்ள அனுமதித்ததால், மாணவர்கள் மட்டுமின்றி, மாணவர்களை கண்டு ஆசிரியர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

The post தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article