தீபாவளி பண்டிகை 39 சிறப்பு ரயில்கள்

3 months ago 16

சேலம்: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டில், அக்டோபர் 31ம் தேதிக்கு முந்தைய 4 நாட்களுக்கும், பிந்தைய 4 நாட்களுக்கும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகளவு உள்ளது. இதனால், தீபாவளி பண்டிகைக்கு முக்கிய வழித்தடங்களில் 39 சிறப்பு ரயில்களை வரும் 25ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரையுள்ள காலகட்டத்தில் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் தயாராகியுள்ளது. மேலும், சில ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கவும், மற்ற முக்கிய வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்களை இயக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்து உள்ளது. சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

The post தீபாவளி பண்டிகை 39 சிறப்பு ரயில்கள் appeared first on Dinakaran.

Read Entire Article