தீபாவளி கூட்டம்: குற்றங்களைத் தடுக்க சென்னை தி.நகரில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

4 months ago 25

சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க சென்னை தி.நகரில் போலீஸார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு வசதியாக பொது மக்கள் புத்தாடை, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை உட்பட அனைத்து வணிக வீதிகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். இதனால், அந்தப் பகுதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி, நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் கொள்ளையர்கள் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக சென்னை போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read Entire Article